
உந்துருளியில் பயணித்த கத்தோலிக்க அருட்தந்தை ஒருவரை தாக்கியதாக கூறப்படும் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் போக்குவரத்து கண்காணிப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் இன்று (25) காலை கைது செய்யப்பட்டதாக கம்பஹா தலைமையகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் மூன்று காவல்துறை சார்ஜென்ட்கள் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்களும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கத்தோலிக்கப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள கொட்டதெனியாவவில் உள்ள ஒரு பண்ணையில் உதவி தோட்ட நிர்வாகியாகப் பணிபுரியும் அருட்தந்தை, திப்பிட்டிகொட தேவாலயத்தில் வழிபாட்டை நடத்திவிட்டுத் திரும்பும் போதே தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

