வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (01) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இன்றிரவு வரை 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு | Warning Notice Issued For 7 Districts
மேற்படி மாவட்டங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.

