இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட மற்றும் தொழில்சார் காரணங்களினால் தான் பதவியிலிருந்து விலகுவதாகப் புத்திக புத்திக ஹேவாவசம் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

