முன்னாள் ஜனாதிபதியும் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இருவரும் நேற்று (01) கொழும்பில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரியவின் மகனின் திருமண வரவேற்ப்பு நிகழ்வு நேற்று கொழும்பில் ஆடம்பர ஹோட்டலில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வுக்கு ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச உட்பட பலர் அழைக்கப்பட்டதுடன் இருவரும் ஒரே மேசையில் அமர்ந்திருந்ததுடன் சஜித், ரணில் இருவரும் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
குறித்த நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், வஜிர அபேவர்தன, லக்ஷ்மன் பொன்சேகா மற்றும் பலர் மேஜையில் அமர்ந்திருந்தனர்.

