Sunday, April 19, 2026
Homeசர்வதேசம்மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்ற நிலை: அமெரிக்கர்களுக்கு டிரம்ப் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்ற நிலை: அமெரிக்கர்களுக்கு டிரம்ப் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில், நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், குவைத், லெபனான், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள் இவ்வாறு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஈரானுக்கு எதிராக இன்னும் பாரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks