Sunday, February 22, 2026
Homeமுக்கிய செய்திகள்திருகோணமலை புத்தரால் பிக்குவிற்கு சிறை; நீதிமன்றில் கொந்தளித்த பெண்!

திருகோணமலை புத்தரால் பிக்குவிற்கு சிறை; நீதிமன்றில் கொந்தளித்த பெண்!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (9) உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கஸ்ஸப தேரரே நீங்கள் பௌத்த மத கடவுள் என சிங்கள பெண் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் கத்தி கூச்சலிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேரர் உள்ளிட்டவர்களின் விளக்க மறியலை நீதிம்ன்றம் இன்று நீடித்து உத்தரவிட்ட நிலையில், சிங்கள பெண் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் கத்தி கூச்சலிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks