பிரித்தானியாவில் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட கறுப்பு நாள் போராட்டம்
பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்களினால் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக இலங்கையின் சுதந்திர தினமான இன்று (04.02.2026) கறுப்பு நாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த பல்வேறுபட்ட ஈழத்தமிழ் அமைப்புகளும் இணைந்த் இந்த போராட்டத்தை ஒருங்கிணைந்திருந்துள்ளனர்.
இதில் பல நூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து இலங்கையின் சுதந்திரதினம் தமிழருக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளில் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தின் போது பேரணியும் நடைபெற்றது.















இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயம் முன்பாக ஆரம்பித்த பேரணி லண்டன் trafalgar சதுக்கம் வரை சென்று முடிவடைந்தது.
சுயநிர்ணயம். தன்னாட்சி உட்பட்ட பல்வேறுபட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

