கஸ்சப்ப உட்பட அனைவரும் இன்று பிணை வழங்கப்பட்டிருக்கின்றது. திட்டமிட்ட பெளத்தமயமாக்ககும் பெளத்த பேரினவாத்தின் கோரமுகமாகவும் அமைந்த திருகோணமலை சம்பவம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டுமானம் மற்றும் மக்களை குழப்பும் விதமாக அமைந்த திடீர் புத்தர் சிலை எந்தவித கரிசனையும் இன்றி அகற்றப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் வேண்டுமென்றே அது செய்யப்படவில்லை மாறாக கைதானவர்கள் அதை குற்றம் என்று கூட ஒத்துக்கொள்ளாமல் வேண்டுமென்றே சிறையில் இருந்தார்கள்.
கரையோரப்பாதுக்காப்பு சட்டம் மீறப்பட்டிருக்கின்றது அது மட்டுமன்றி இனவாத முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
திருகோணமலையில் நேற்றுவரை சிங்கள ராவய போன்ற காட்டுமிராண்டி கூட்டங்கள் இனவாத நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.
இறுதியில் என்ன நடந்தது மேலதிகமாக ஒரு புத்தர் சிலையும் கட்டடமும் இனவாதமும் உருவாகியிருக்கின்றது.
இதனை நிறுத்த அந்த சிலையை உடனடியாக அகற்றியிருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை.

