தென் கொரியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கொரியக் குடியரசின் வெளிவிவகார பிரதி அமைச்சர் யுயி-ஹே செசிலியா சுங் (Eui-Hae Cecilia Chung) (25.02.2026) ஆகியோர் சியோல் நகரில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சியோலில் உள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இலங்கை மற்றும் கொரியக் குடியரசு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முன்னேற்றம் உள்ளிட்ட தொடர்ச்சியான பொருளாதார மீட்சிச் செயல்முறையுடன் இணைந்து பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், அபிவிருத்தி ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், டித்வா அனர்த்தத்திற்கு பின்னர் இலங்கைக்கு கொரியக் குடியரசு வழங்கிய துரிதமான உதவிக்கு பிரதி அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் மீள்கட்டமைப்பு தேசிய முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

