பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரப்படும் சட்டமூல முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று சர்வதேச பயங்கரவாதத்துறை நிபுணர் ரொஹான் குணரத்ன Hiru க்கு வழங்கிய நேர்காணலில் இதனை வலியுறுத்தியுள்ளார்.
காலத்துக்கு காலம் பதவிக்கு வரும் அரசாங்கங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதாக அறிவிக்கின்றன. எனினும் அரசியலுக்கு அப்பால் தேசிய நலன் என்ற அடிப்படையில் குறித்த முன்மொழிவு வலுப்படுத்தப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும்
புலிகளின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் இலங்கையில் சட்டங்கள் வலுவிழக்கும்போது, அவர்களின் எழுச்சி பெறக்கூடும் நாட்டில் அவர்கள் சார்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகள் பகிரங்கமாகவே நடத்தப்படுகின்றன.
புலிகளின் செயற்பாடுகள் வெளிநாடுகளில் வலுப்பெற்றுள்ளன
எனவே அரசாங்கம் புதிய சட்டத்தின்மூலம் இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்றும் ரொஹான் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.

