இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் 22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்த யோசனையை சவாலுக்கு உட்படுத்தி இன்று செவ்வாயக்கிழமை (18) உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.
இத் திருத்த யோசனையின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தெரிவித்து, அவை நிறைவேற்றப்பட வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என அறிவிக்குமாறு இந்த மனுக்கள் மூலம் கோரப்படவுள்ளதாக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வீரகேசரிக்கு தெரிவித்தார்.

