
திருகோணமலை போதிராஜ விகாரையில் புத்தர் சிலையை வைத்ததன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஆறு பேர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் இந்த குழு பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

