Sunday, April 19, 2026
Homeபிரதான செய்திகள்இலங்கை தீவையும் ஆக்கிரமிக்கப் போகிறாரா ட்ரம்ப்..! அநுர தரப்பிற்கும் உள் கேள்விகள்

இலங்கை தீவையும் ஆக்கிரமிக்கப் போகிறாரா ட்ரம்ப்..! அநுர தரப்பிற்கும் உள் கேள்விகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தியுள்ள தாக்குதல் குறித்து அரசின் தெளிவான நிலைப்பாடு என்ன, அமெரிக்க ஜனாதிபதியைக் கண்டு இந்த அரசு அஞ்சுகின்றதா என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(04.03.2026) புதன்கிழமை உரையாற்றிய போதே அவர் இந்தக் காரசாரமான கேள்விகளை முன்வைத்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

ரம்ழான் நோன்பு என்பது இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் மக்களுக்கு மிக முக்கியமான ஒரு ஆன்மீகக் கடமையாகும். எமது சக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூட நோன்பு நோற்ற நிலையில் தான் இங்கு சமூகமளித்துள்ளார்.

இவ்வாறானதொரு புனிதமான காலப்பகுதியிலேயே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். ஈரான் மக்கள் நோன்பு நோற்றிருந்த தருணத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கத் தலைவரே இதனை முன்னின்று செய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு சண்டியரைப் போலவே செயற்படுகின்றார். அனைத்து நாடுகளையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையிலேயே அவர் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த விவகாரத்தில் இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன என்பதைத் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும், இப்போது அவர்கள் அமைதி காக்கின்றார்கள். அமெரிக்க ஜனாதிபதியைக் கண்டு இந்த அரசாங்கம் அச்சப்படுகின்றதா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks